இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு

கொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment